உலகம்

``அண்ணா வாறார் யாரும் அழ வேண்டாம்''சாந்தனை ஆரத்தி எடுத்து வரவேற்ற தங்கை

தந்தி டிவி

வவுனியாவில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட சாந்தனின் உடல், வாகனம் மூலம் மாங்குளம் - கிளிநொச்சி வழியாக, யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்டது. வடமராட்சியை வந்தடைந்து நெல்லியடி மற்றும் தீருவிலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், உடுப்பிட்டியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டுக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது, 'அண்ணா வறார் யாரும் அழ கூடாது' என்று ஆரத்தி எடுத்து சாந்த‌னின் சகோதரி வரவேற்றது காண்போரை கண்கலங்க செய்த‌து. பின்னர் வீட்டில் அனைவரும் ஓம் நமசிவாய சொல்லி அஞ்சலி செலுத்தினர். சாந்த‌னின் இறுதி ஊர்வலம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வல்வைட்டித்துறை, பொலிகண்டி வழியாக எள்ளங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என கூறப்பட்டுள்ளது

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி