மதுபோதையில வண்டி ஓட்டி கைதான பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ், இப்போ மனசு மாறி தானாவே முன்வந்து ஒரு மறுவாழ்வு மையத்துல சேர்ந்திருக்காங்க... ஒருகாலத்துல பாப் உலகத்துல கொடிகட்டி பறந்தவங்கதான் பிரிட்னி ஸ்பியர்ஸ்... அதுக்கப்றம் தனிப்பட்ட வாழ்க்கைல பல பிரச்சினைகள எதிர்கொண்ட பிரிட்னி...கடந்த மார்ச் 4ஆம் தேதி கலிபோர்னியால மதுபோதையில கார் ஓட்டுனதுக்காக பிரிட்னிய போலீஸ் கைது செஞ்சு அப்புறம் ரிலீஸ் பண்ணாங்க.... இந்த கேஸ் சம்பந்தமா வர்ற மே 4ஆம் தேதி அவர் கோர்ட்ல ஆஜராகணும்... இது ரொம்ப வருத்தமான விஷயம்னு சொன்ன அவரோட மேனேஜர், பிரிட்னி சட்டத்துக்குக் கட்டுப்படுவார்னு சொல்லியிருக்காரு... இப்போ அவரோட குடும்பத்தினர் கொடுத்த தைரியத்துல, குடிப் பழக்கத்துல இருந்து வெளிய வர மறுவாழ்வு மையத்துல சேர்ந்திருக்காங்க பிரிட்னி... இதைக் கேள்விப்பட்ட அவரோட ரசிகர்கள், அவர் சீக்கிரம் குணமாய் வரணும்னு வாழ்த்திட்டு இருக்காங்க.