உலகம்

பிரம்மபுத்திரா நதி குறுக்கே புதிய அணை - சீன நாடாளுமன்றம் ஒப்புத​ல்

அருணாச்சல பிரதேசத்தின் எல்லை அருகே, பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்ட சீன அரசு திட்டமிட்டுள்ளது.

தந்தி டிவி
அருணாச்சல பிரதேசத்தின் எல்லை அருகே, பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்ட சீன அரசு திட்டமிட்டுள்ளது. சீன நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்ட 14 ஆவது ஐந்தாண்டு திட்டத்தில், நீர் மின் நிலையத்துடன் கூடிய அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங், சீனப் பிரதமர் லி கேகியாங் முன்னிலையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இத்தகைய அணை கட்டுக்கள், இந்தியா மற்றும் வங்கதேச நாடுகள் தங்கள், நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கவலை தெரிவித்துள்ளன. அந்நாடுகளின் நலன்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத முறையில் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்று சீனா கூறியுள்ளது.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக