உலகம்

வியன்னா நகரில் செயற்கை கருவூட்டலின் மூலம் பிறந்த யானை குட்டி

ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் உள்ள வியன்னா வனவிலங்கு உயிரியல் பூங்காவில் செயற்கை கருவூட்டலின் மூலம் யானை குட்டி ஒன்று பிறந்துள்ளது.

தந்தி டிவி
ஆஸ்திரியாவின், வியன்னா நகரில் உள்ள, வியன்னா வனவிலங்கு உயிரியல் பூங்காவில் செயற்கை கருவூட்டலின் மூலம் யானை குட்டி ஒன்று பிறந்துள்ளது. செயற்கை கருவூட்டல் மூலம் பிறந்த உலகின் 2வது யானையான இது, தாயுடன் கொஞ்சி விளையாடும் காட்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.நும்பி என்ற யானைக்கு நேற்று பிறந்த இந்த குட்டி யானை 90 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக உள்ளதாக பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த குட்டிக்கு பெயரை தேர்வு செய்வதற்காக வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜூலை 23ஆம் தேதியுடன் நிறைவு பெறும் வாக்குப்பதிவை அடுத்து, குட்டி யானைக்கு பெயர் அறிவிக்கப்படும்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்