உலகம்

90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 50 கோடி பைசர் - அமெரிக்கா வழங்க உள்ளதாக பைடன் தகவல்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 90-க்கும் மேற்பட்ட குறைந்த வருவாய் கொண்ட நாடுகளுக்கு சுமார் 50 கோடி பைசர் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்க உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 50 கோடி பைசர் - அமெரிக்கா வழங்க உள்ளதாக பைடன் தகவல்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 90-க்கும் மேற்பட்ட குறைந்த வருவாய் கொண்ட நாடுகளுக்கு சுமார் 50 கோடி பைசர் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்க உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் இதுவரை 64 சதவீதம் மக்களுக்கு பைசர், மாடர்னா, ஜான்சன் & ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளை செலுத்தியுள்ளனர். தற்போது உலக நாடுகளுக்கு நன்கொடை வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளனர். இது பற்றி வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், இன்றைய நன்கொடையின் குறிக்கோள் உயிர்களை காப்பாற்றுவதும், தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வருவது எனத் தெரிவித்துள்ளது. மேலும் பெருந்தொற்றுக்கு எதிரான உலகின் போராட்டத்திற்கு இது உதவும் என்றும், சுமார் 8 கோடி டோஸ்கள் ஜூன் இறுதிக்குள் நன்கொடை அளிப்பதாக ஏற்கனவே உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்திற்காக 200 கோடி டாலர் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்