உலகம்

சைபர் குற்றங்களுக்கு எதிராக செயலி உருவாக்கம் - 17 வயது சிறுவனுக்கு அமைதிக்கான விருது

வங்கதேசத்தைச் சேர்ந்த சதாத் ரஹ்மான் எனும் 17 வயது சிறுவனுக்கு, குழந்தைகளுக்கான அமைதி விருது வழங்கப்பட்டுள்ளது. இணைய வெளியில் சீண்டலுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு உதவும் செயலியை சதாத் ரஹ்மான் உருவாக்கினார்.

தந்தி டிவி
வங்கதேசத்தைச் சேர்ந்த சதாத் ரஹ்மான் எனும் 17 வயது சிறுவனுக்கு, குழந்தைகளுக்கான அமைதி விருது வழங்கப்பட்டுள்ளது. இணைய வெளியில் சீண்டலுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு உதவும் செயலியை சதாத் ரஹ்மான் உருவாக்கினார். சைபர் குற்றங்கள், குழந்தைகளை மோசமாக பாதித்து வரும் நிலையில், இந்த செயலி பயனுள்ளதாக இருந்துள்ளது. இதையடுத்து, குழந்தைகள் உரிமைகளுக்காக இயங்கி வரும் கிட்ஸ் ரைட்ஸ் நிறுவனம், சதாத் ரஹ்மானை அமைதி விருதுக்காக தேர்ந்தெடுத்தது. நெதர்லாந்தில் நடைபெற்ற விழாவில், நோபல் விருதுபெற்ற மலாலா யூசப்சாய், இவ்விருதினை வழங்கி கவுரவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை