உலகம்

இந்தியாவில் தங்கியிருந்த ஆஸ்திரேலியர்கள் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பக் கூடாது - எச்சரிக்கும் ஆஸ்திரேலிய சுகாதாரத் துறை

இந்தியாவில் தங்கியிருந்த ஆஸ்திரேலியர்கள் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பினால், 50 லட்ச ரூபாய் அபராதம் அல்லது 5 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் க்ரெக் ஹன்ட் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இந்தியாவில் தங்கியிருந்த ஆஸ்திரேலியர்கள் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பக் கூடாது - எச்சரிக்கும் ஆஸ்திரேலிய சுகாதாரத் துறை

இந்தியாவில் தங்கியிருந்த ஆஸ்திரேலியர்கள் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பினால், 50 லட்ச ரூபாய் அபராதம் அல்லது 5 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் க்ரெக் ஹன்ட் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவலானது அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் நிலைமை அதி தீவிரமாகி வருகிறது. ஏற்கனவே இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு ஆஸ்திரேலியாவில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, எல்லைப்பகுதிகளில் கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப் பட்டிருப்பதாகத் தெரிவித்த ஆஸ்திரேலிய சுகாதாரத் துறை அமைச்சர், விதிகளை மீற எண்ணினால், 50 லட்ச ரூபாய் அபராதம் அல்லது 5 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்தார்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்