குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள பிரேசர் தீவுகளில் ஏற்பட்டுள்ள இந்த காட்டுத் தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு படை வீரர்கள், தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இதுவரை தீயை அணைக்க சுமார் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக குயின்ஸ்லாந்து தீயணைப்பு துறை தெரிவித்து உள்ளது. இதனிடையே, காட்டுத் தீயால் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.