கொரோனா தொற்றை தடுப்பது மற்றும் அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்ததில், மாற்று முறையை கையாண்டு இருந்தால் ஏராளமான மக்களை இழந்திருக்கும் நிலை ஏற்பட்டு இருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சுமார் 20 லட்சம் பேர் வரை உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு இருக்கும் என்றும், நாம் சரியான பாதையில் நடவடிக்கை எடுத்ததால், பெரும் உ யிரிழப்பு தவிர்க்கப்பட்டு உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுவரை நாம் சரியான நடவடிக்கைகளையே எடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ள டிரம்ப், பணிக்கு திரும்ப வேண்டிய நேரம் வந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.