உலகம்

கலிஃபோர்னியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று - நேற்று மட்டும் 7,149 பேருக்கு தொற்று உறுதி

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நேற்று மட்டும் புதிதாக 7 ஆயிரத்து 149 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தந்தி டிவி

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நேற்று மட்டும் புதிதாக 7 ஆயிரத்து 149 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 222 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2 வாரங்களில் 29 சதவீதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளதாகவும், அவசர சிகிச்சை பிரிவில் உள்ள 30 சதவீத படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் மற்ற மாகாணங்களிலும் தொற்று அதிகரித்து வரும் நிலையில், முக கவசம் உள்ளிட்ட நடைமுறைகளை கடைபிடிக்காத கிராமப்புற பகுதிகளுக்கு நிதியுதவி கிடைக்காது என அம்மாகாண ஆளுநர் எச்சரித்துள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்