#irantamilnews #trump #iranisraelwar #alikhameneideath #iranisraelwartamilnewstoday #netanyahu #iranisraelwarnewstodaytamil ஈரானிய வான்வெளியை முழுமையாக கட்டுப்படுத்துவோம் என அமெரிக்கா சூளுரை ஒரு வாரத்திற்குள் உலகின் சக்திவாய்ந்த இரண்டு விமானப்படைகள் ஈரானிய வான்வெளியை முழுமையாக கட்டுப்படுத்தும் என அமெரிக்க போர் துறை செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். பகல் மற்றும் இரவு முழுவதும் வானில் பறந்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் விமானப்படை ஈரானிய ஏவுகணைகள் மற்றும் பாதுகாப்பு தளங்களை கண்டுபிடித்து அழிக்கும் என்றும் ஈரான் தலைவர்கள் மற்றும் ராணுவ தலைவர்களை கண்டறிந்து சரி செய்யும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் தீர்மானிக்கும் வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஈரானிய தலைவர்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் விமானப்படைகளின் சக்தியை வானில் காண இருக்கிறார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.