ஆப்கனில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்து இருப்பதால் பெண்களின் கல்வி, கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில், ஆப்கனில் மாணவிகள் கல்வி கற்க மறுக்கப்பட்டால், கடுமையான பாதிப்புகள் நேரிடும் என்று யுனெஸ்கோ தலைவர் அசவ்லே தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார். காலதாமதமாக பள்ளிகளைத் திறப்பது, இடைநிற்றலை அதிகரித்து இறுதியில் மாணவிகளின் கல்வி வாய்ப்பை பறித்துவிடும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.