வங்கக் கடலில் உருவான மோந்தா புயல் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் அருகே கரையைக் கடக்கிறது. இதையொட்டி நெல்லூரில் பலத்த மழை பெய்ததால், தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியது. மேலும், சாலை குண்டும் குழியுமாக காட்சியளித்ததால், வாகனங்கள் தத்தளித்தபடி சென்றன...
கனமழை காரணமாக நெல்லூர் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொண்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.