எக்ஸ்போசாட் செயற்கைக்கோளின் வெற்றிகரமான நிலைநிறுத்தத்துடன் புத்தாண்டு தொடங்கி இருப்பதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்ட பிறகு பேசிய அவர், இன்னும் பல ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்படும் என்று கூறினார். 2024ம் ஆண்டு ககன்யான் விண்வெளித் திட்டத்தின் ஆண்டாக இருக்கும் என்றும் சோம்நாத் நம்பிக்கை தெரிவித்தார்.