வளர்ப்பு நாய் பாம்பை கடித்த வீடியோவை வெளியிட்டவருக்கு அபராதம்
ஈரோடு அருகே வளர்ப்பு நாய் பாம்பை கடித்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட இளைஞருக்கு வனத்துறை அபராதம் விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த செரியன் என்பவர், தனது பண்ணையில் நுழைந்த சாரைப்பாம்பை வளர்ப்பு நாய் தாக்கும் காட்சியை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.