Salem Youth Attack | மதுபோதையில் கோயிலுக்குள் சரமாரியாக மோதிக்கொண்ட இளைஞர்கள் | பரபரப்பு காட்சி
விநாயகர் சதுர்த்தி நன்கொடை - சேலம் கோவிலுக்குள் இளைஞர்கள் மோதல் சேலத்தில் மதுபோதையில் கோவிலுக்குள் நுழைந்த இளைஞர்கள், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோ எளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகர் சாமிநாதபுரம் பகுதியில் மாரியம்மன் கோயிலில், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு நன்கொடை வசூலிப்பது தொடர்பாக இருதப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஸ்ரீநாத் என்பவருக்கு, கோயிலில் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால், பெண்கள் அச்சமடைந்து அலறி அடித்து ஓடினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.