தமிழ்நாடு

தண்டவாளத்தில் இளைஞர் சடலம் - போலீசார் விசாரணை

தந்தி டிவி

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தண்டவாளத்தில் சடலமாக கிடந்த இளைஞரின் உடலை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்...

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வேட்டப்பட்டு அருகே உள்ள ரயில் தண்டவாளத்தின் அருகே வாலிபர் ஒருவர் அவ்வழியாக சென்ற ஏதோ ஒரு ரயிலில் தவறி விழுந்து உடல் சிதறி இறந்து கிடந்தார்.பின்னர் இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியாத நிலையில் இது குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் ரயிலில் இருந்து கீழே விழுந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்ற கோணத்திலும் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்து வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு