தமிழ்நாடு

Kelambakkam | ஜாமினில் வந்த இளைஞர் வெட்டிக் கொலை - கேளம்பாக்கத்தில் பரபரப்பு

ஜாமினில் வந்த இளைஞர் வெட்டிக் கொலை - கேளம்பாக்கத்தில் பரபரப்பு

thanthitv

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் அருகே, இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேளம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சாகுல் அமீத்.குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு பிணையில் வெளியே வந்துள்ளார்.இந்த நிலையில், இடுகாடு பகுதியில் ஏழு பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இதையடுத்து தகவலறிந்து வந்து சாகுல் அமீத்தின் உடலை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Nepal Flood Latest Update | இந்தியாவுக்கு அதிர்ச்சி செய்தி சொன்ன சீன அரசு

Chennai Airport | TN Govt | கைவிடப்பட்ட பரந்தூர் ஏர்போர்ட் | மாஸ் பிளானோடு இறங்கிய தமிழக அரசு

Tiruvallur Accident | ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து பலி | கோயிலுக்கு வந்த‌போது சோகம்

Velankanni | வேளாங்கண்ணியில் லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருந்த அந்த நொடி நிகழ்ந்தது!

Velankanni | வேளாங்கண்ணியில் பலூன் வெடித்து பற்றிய தீ.. கொடியேற்ற திருவிழாவில் பரபரப்பு