தமிழ்நாடு

போதை பொருளுக்காக வடமாநில இளைஞர் அடித்து கொலை

சென்னையில், பட்டபகலில், போதை பொருள் கேட்டு வடமாநில இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

பாரிமுனையில் இருந்து கோயம்பேடு செல்லும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனியார் உணவகம் அருகே அமர்ந்திருந்த வடமாநில இளைஞரிடம், தேவன், மதுரை முத்து ஆகிய இருவர், போதைப்பொருள் கேட்டு அடிதடியில் ஈடுபட்டுள்ளனர். போதைப்பொருள் இல்லாதது தெரியவந்ததும் ஆத்திரம் அடைந்த அந்த இருவரும், வடமாநில இளைஞரை சென்னை மாநகர பேருந்து முன் தூக்கி வீசி எறிந்தனர். பேருந்தின் முன் சக்கரம் ஏறி இறங்கியதில் அந்த நபர் உயிரிழந்தார். விபத்தில் இளைஞரின் முகம் சிதைந்ததால், அவர் யார் என அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா