தமிழ்நாடு

போதை பொருளுக்காக வடமாநில இளைஞர் அடித்து கொலை

சென்னையில், பட்டபகலில், போதை பொருள் கேட்டு வடமாநில இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

பாரிமுனையில் இருந்து கோயம்பேடு செல்லும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனியார் உணவகம் அருகே அமர்ந்திருந்த வடமாநில இளைஞரிடம், தேவன், மதுரை முத்து ஆகிய இருவர், போதைப்பொருள் கேட்டு அடிதடியில் ஈடுபட்டுள்ளனர். போதைப்பொருள் இல்லாதது தெரியவந்ததும் ஆத்திரம் அடைந்த அந்த இருவரும், வடமாநில இளைஞரை சென்னை மாநகர பேருந்து முன் தூக்கி வீசி எறிந்தனர். பேருந்தின் முன் சக்கரம் ஏறி இறங்கியதில் அந்த நபர் உயிரிழந்தார். விபத்தில் இளைஞரின் முகம் சிதைந்ததால், அவர் யார் என அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்