சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இளைஞர் கொலை... பெரும் பரபரப்பு சென்னை ராமாபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தில், இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு அடிதடியாக மாறியதில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகரில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நேற்றிரவு விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. 13-வது தெருவில் ஊர்வலம் பாதியிலேயே திரும்பியதால், முழுமையாக ஊர்வலம் செல்ல வேண்டும் என அப்பகுதியினர் கேட்டுள்ளனர். இதனால் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு, அடிதடியாக மாறியதாக கூறப்படுகிறது. இதில் சீனிவாசன் என்பவர் தாக்குதலுக்கு உள்ளாகி, கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உரிய நேரத்தில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி சீனிவாசன் உயிரிழந்தார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய ராமாவரம் போலிஸார் 5 பேரை கைது செய்துள்ளனர்.