தமிழ்நாடு

முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை...

ராஜபாளையம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவரை வெட்டி கொலை செய்த நபர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

தந்தி டிவி
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சின்ன சுரைக்காய் பட்டியைச் சேர்ந்தவர் சங்கர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவருக்கும் நான்கு மாதங்களாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கருப்பசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் சிறையில் இருந்த அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதனால் ஆத்திரமடைந்த கருப்பசாமி, கோயில் திருவிழாவை பயன்படுத்தி சங்கரை கொலை செய்ய திட்டமிட்டார். நேற்று இரவு திருவிழாவுக்காக பொதுமக்கள் பால்குடம் எடுத்த நிலையில் அங்கு வந்த கருப்பசாமி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சங்கரை சரமாரியாக வெட்டினார். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், காவல்நிலையத்தில் சென்று கருப்பசாமி சரணடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி