தமிழ்நாடு

வாங்கிய கடனை கட்டச் சொல்லி நிதி நிறுவனம் அழுத்தம் - இளைஞர் தற்கொலை

தந்தி டிவி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தத்தனூர் நடுவெளி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த ஆண்டு 12 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். கடன் வாங்கியதைத் தொடர்ந்து மாதந்தோறும் தவணை கட்டி வந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக மணிகண்டன் தவணை கட்டவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து, நிதி நிறுவனத்தைச் சேர்ந்த 2 ஊழியர்கள் மணிகண்டனை தகாத வார்த்தைகளால் திட்டி மூன்று மாத தவணையை கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் விஷம் அருந்தி மயங்கியுள்ளார். அக்கம் பக்கத்தினர் மணிகண்டனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பெற்றுவந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்