தமிழ்நாடு

இளைஞரை தாக்கி இரு சக்கர வாகனம் திருட்டு - 4 பேர் கைது

சென்னை அருகே இளைஞரை தாக்கி இருசக்கர வாகனத்தை திருடிய, 4 பேரை போலீசார் கைது செய்தனர்

தந்தி டிவி

சென்னை அருகே இளைஞரை தாக்கி இருசக்கர வாகனத்தை திருடிய, 4 பேரை போலீசார் கைது செய்தனர். எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த வினோத் என்ற இளைஞர், காலடிபேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது, 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வினோத் மீது கற்களை வீசி தாக்கி இரு சக்கர வாகனத்தை திருடி சென்றனர். இது குறித்து வினோத் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சுனாமி குடியிருப்பை சேர்ந்த அஜீத் ,பிரசாத் ,பூபாலன் ,பாலாஜி ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை