தமிழ்நாடு

காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு - தனியார் நிறுவன ஊழியர் கைது

மயிலாடுதுறை அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள மறுத்த இளைஞரை போலீசார் கைதுசெய்தனர்.

தந்தி டிவி

குத்தாலம் அடுத்த கொழையூர் கிராமத்தை சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியர் பிரவின்ராஜ். இவர், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். மேலும், திருமண ஆசை கூறி அவருடன் உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, வசதிகுறைவு காரணமாக அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள பிரவீன்ராஜ் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டார். அப்போது, காதலித்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள பிரவீன்ராஜ் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த புகாரின் பேரில் அவரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்