தமிழ்நாடு

கடையில் ரூ.2,000 கள்ள நோட்டு மாற்றிய இளைஞர் : ஓடியவரை பிடித்து போலீசில் ஒப்படைத்த உரிமையாளர்

இனிப்புக்கடை ஒன்றில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டை மாற்ற முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
இனிப்புக்கடை ஒன்றில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டை மாற்ற முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். சென்னை அயனாவரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஏழுமலை என்ற அந்த இளைஞர் 2 ரூபாய் நோட்டை கொடுத்து இனிப்பு வாங்கிய நிலையில் மீதித் தொகையை பெற்றுக் கொண்டு வேகமாக ஓடியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த கடை உரிமையாளர் அருணகிரி, அந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டை பார்த்த போது, அது கள்ளநோட்டு என தெரியவந்தது. பின்னர் அவரை விரட்டிப் பிடித்த அருணகிரி, காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில் ஏழுமலையிடம் இருந்த மேலும் 6 இரண்டாயிரம் ரூபாய் கள்ளநோட்டுக்களை பறிமுதல் செய்தனர். இதனிடையே அவருக்கு கள்ளநோட்டை கொடுத்த சதீஸ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?