தமிழ்நாடு

கடையில் ரூ.2,000 கள்ள நோட்டு மாற்றிய இளைஞர் : ஓடியவரை பிடித்து போலீசில் ஒப்படைத்த உரிமையாளர்

இனிப்புக்கடை ஒன்றில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டை மாற்ற முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
இனிப்புக்கடை ஒன்றில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டை மாற்ற முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். சென்னை அயனாவரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஏழுமலை என்ற அந்த இளைஞர் 2 ரூபாய் நோட்டை கொடுத்து இனிப்பு வாங்கிய நிலையில் மீதித் தொகையை பெற்றுக் கொண்டு வேகமாக ஓடியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த கடை உரிமையாளர் அருணகிரி, அந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டை பார்த்த போது, அது கள்ளநோட்டு என தெரியவந்தது. பின்னர் அவரை விரட்டிப் பிடித்த அருணகிரி, காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில் ஏழுமலையிடம் இருந்த மேலும் 6 இரண்டாயிரம் ரூபாய் கள்ளநோட்டுக்களை பறிமுதல் செய்தனர். இதனிடையே அவருக்கு கள்ளநோட்டை கொடுத்த சதீஸ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"