தமிழ்நாடு

கடையில் ரூ.2,000 கள்ள நோட்டு மாற்றிய இளைஞர் : ஓடியவரை பிடித்து போலீசில் ஒப்படைத்த உரிமையாளர்

இனிப்புக்கடை ஒன்றில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டை மாற்ற முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
இனிப்புக்கடை ஒன்றில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டை மாற்ற முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். சென்னை அயனாவரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஏழுமலை என்ற அந்த இளைஞர் 2 ரூபாய் நோட்டை கொடுத்து இனிப்பு வாங்கிய நிலையில் மீதித் தொகையை பெற்றுக் கொண்டு வேகமாக ஓடியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த கடை உரிமையாளர் அருணகிரி, அந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டை பார்த்த போது, அது கள்ளநோட்டு என தெரியவந்தது. பின்னர் அவரை விரட்டிப் பிடித்த அருணகிரி, காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில் ஏழுமலையிடம் இருந்த மேலும் 6 இரண்டாயிரம் ரூபாய் கள்ளநோட்டுக்களை பறிமுதல் செய்தனர். இதனிடையே அவருக்கு கள்ளநோட்டை கொடுத்த சதீஸ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்