தமிழ்நாடு

போலி டிக்கெட்டில் சென்னை விமான நிலையத்தில் நுழைந்த இளைஞர்

சென்னை விமான நிலையத்தில் போலி விமான டிக்கெட்டில் நுழைந்த சீன இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

சென்னை விமான நிலையத்தில் போலி விமான டிக்கெட்டில் நுழைந்த சீன இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தின் 4 வது நுழைவு வாயிலில் இருந்து வெளியேற முயன்ற இளைஞர் ஒருவரிடம் பாதுகாப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பயணத்தை ரத்து செய்துவிட்டு திரும்பிச் செல்வதாக கூறிய அந்த இளைஞரின், விமான டிக்கெட்டை ஆய்வு செய்தபோது, அது போலியானது என தெரியவந்துள்ளது. அதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், அவர் சீனாவை சேர்ந்தவர் என்பதும், ஆந்திர மாநிலம் நெல்லூரில் தனியார் காலணி நிறுவனத்தில் பணியாற்றுவதும் தெரிய வந்துள்ளது. தனது காதலியை வழியனுப்ப விமான நிலையத்திற்குள் சென்றுவிட்டு, வெளியே வர ஹாங்காங் பயணி போல் போலியான டிக்கெட்டை கொண்டு வந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து சீன இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்