தமிழ்நாடு

பட்டப்பகலில் இளைஞர் குத்திக்கொலை :ஆணவக் கொலையா? - போலீஸ் விசாரணை

சென்னையில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

சென்னையில், பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சோழிங்கநல்லூர் அடுத்த காரப்பாக்கத்தில் முரளி என்பவர் டீக்கடை ஒன்றில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்மநபர் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி விட்டார். இதில் சம்பவ இடத்திலேயே முரளி உயிரிழந்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த முரளி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வேறொரு சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த சூழலில் தற்போது அவர் கொலை செய்யப்பட்டுள்ளதால், ஆணவக் கொலையா இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தொடங்கி உள்ள கண்ணகி போலீசார், தப்பியோடிய கொலையாளியை வலைவீசி தேடி வருகின்றனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு