தமிழ்நாடு

மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறு - இளைஞர் கொலை

மணப்பாறை அருகே, மது அருந்தும்போது, இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் உறவினர் இருவர் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி

மணப்பாறை அருகே, மது அருந்தும்போது, இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் உறவினர் இருவர் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே உள்ள ஆனாங்கரைப்பட்டியைச் சேர்ந்த பொன்னுசாமி, கடந்த 28ஆம் தேதி உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். ஆனாங்கரைப்பட்டியைச் சேர்ந்த பொன்னுசாமியின் உறவினர்கள் பழனிவேல், ராமன் ஆகியோர், அவருடன் கடந்த 27ஆம் தேதி மது அருந்தியுள்ளனர். அப்போது தகராறில் அவர்கள் தள்ளி விட்ட போது கீழே விழுந்த பொன்னுசாமியின் தலை மற்றும் நெஞ்சுப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. கொலை வழக்காக பதிவு செய்த வையம்பட்டி போலீசார், பழனிவேல் மற்றும் ராமன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்