தமிழ்நாடு

மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறு - இளைஞர் கொலை

மணப்பாறை அருகே, மது அருந்தும்போது, இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் உறவினர் இருவர் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி

மணப்பாறை அருகே, மது அருந்தும்போது, இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் உறவினர் இருவர் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே உள்ள ஆனாங்கரைப்பட்டியைச் சேர்ந்த பொன்னுசாமி, கடந்த 28ஆம் தேதி உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். ஆனாங்கரைப்பட்டியைச் சேர்ந்த பொன்னுசாமியின் உறவினர்கள் பழனிவேல், ராமன் ஆகியோர், அவருடன் கடந்த 27ஆம் தேதி மது அருந்தியுள்ளனர். அப்போது தகராறில் அவர்கள் தள்ளி விட்ட போது கீழே விழுந்த பொன்னுசாமியின் தலை மற்றும் நெஞ்சுப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. கொலை வழக்காக பதிவு செய்த வையம்பட்டி போலீசார், பழனிவேல் மற்றும் ராமன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி