தமிழ்நாடு

பிளாஸ்டிக்கை தவிர்க்கும் இறைச்சி வியாபாரி : பேப்பர், வாழை இலையில் கட்டப்படும் பொட்டலம்

குடியாத்தம் பகுதியில் பிளாஸ்டிக் கவர்களை தவிர்த்து, மாற்றுவழியில் பொட்டலம் கட்டி தரும் இறைச்சி வியாபாரிக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

தந்தி டிவி
2019 ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, வியாபாரிகள் பொட்டலம் கட்டவும், பொருட்களை எடுத்து செல்லவும் மாற்றுவழியை பழக்கப்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, குடியாத்தத்தில் உள்ள இறைச்சி கடை ஒன்றில், பேப்பர், வாழைஇலை வைத்து பொட்டலம் கட்டும் வியாபாரி கோபி, அதை துணிப்பையில் வைத்து நுகர்வோர்களிடம் வழங்குகிறார். வியாபாரியின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கூடுதல் செலவு ஏற்பட்டாலும், சுற்றுச்சூழலை பாதுகாக்க தம்மால் முடிந்த உதவியை செய்வதில் மன நிறைவாக இருப்பதாக அந்த வியாபாரி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்