தமிழ்நாடு

+1 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள் - மாணவி உயிரிழப்பு

இளைஞர்களை கைது செய்யக்கோரி மாணவியின் பெற்றோர் போராட்டம்

தந்தி டிவி

அரூர் அடுத்த சிட்லிங் மலைகிராமத்தை சேர்ந்த அண்ணாமலை - மலர் தம்பதியின் மகள் சௌமியா பதினென்றாம் வகுப்பு படித்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ரமேஷ் மற்றும் சதிஸ், குடிபோதையில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் 2 இளைஞர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி, குழந்தைகள் இல்லத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி மாணவிக்கு உடல்நலம் குன்றியதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, இறந்த மாணவியின் பெற்றோர் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு