குடும்ப கட்டுப்பாடு செய்த இளம்பெண் திடீர் மரணம்.. அரசு வேலை கேட்கும் உறவினர்கள்
குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு பின் இளம்பெண் உயிரிழப்பு சேலம் மாவட்டம், கருமந்துறையை சேர்ந்த சுமதி, குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முடிந்த சில மணி நேரங்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சுமதியின் கணவர் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து, சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கவும், குழந்தைகளின் கல்விச்செலவை அரசு ஏற்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் கோரிக்கை விடுத்தனர்.
#familyplanning #familyplanningsurgery