தமிழ்நாடு

குழந்தையுடன் இளம்பெண் தற்கொலை முயற்சி - கணவர் குடும்பம் மீது புகார்

thanthitv

சேலத்தில், கணவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்துவதாக கூறி இளம்பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கருப்பூர் அருகே மூங்கில்பாடி பகுதியைச் சேர்ந்த சொர்ணா என்பவருக்கு பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில், இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சொர்ணா, அதிமுக பிரமுகரான மாமனார் கோவிந்தசாமி, மாமியார் உள்ளிட்டோர் சூடு வைத்து சித்ரவதை செய்வதாகவும், கணவருடன் சேர்ந்து வாழ விடாமல் தடுப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கணவர் வீட்டின் முன்பு சொர்ணா, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், சொர்ணாவுக்கு நியாயம் கேட்டு, அவரது உறவினர்கள் கருப்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதை தொடர்ந்து, உரிய ஆவணங்களுடன் புகார் அளித்தால், கணவர் குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

ADMK |TVK| அதிமுகவை தவெக உடைக்கிறதா? - IUML காதர் மொய்தீன் ஒரே போடு.. பரபரப்பு அரசியல் ட்விஸ்ட்

Congress | தோல்விக்கு காரணம் என்ன? - விசாரணையில் இறங்கிய காங்கிரஸ்

Ajithkumar | நடிகர் அஜித் தாயார் மறைவு "தாங்கி கொள்ள முடியாத இழப்பு.." - அரசியல் தலைவர்கள் இரங்கல்

Alangulam Issue| நெல்லை, தென்காசி அரிவாள் வெட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சைக்கோ கும்பல் இதான்

Ajith Mother Death | துபாயில் இருந்து இன்னும் வராத அஜித் - தாயாருக்கு எப்போது இறுதிச்சடங்கு?