தமிழ்நாடு

குழந்தையுடன் இளம்பெண் தற்கொலை முயற்சி - கணவர் குடும்பம் மீது புகார்

thanthitv

சேலத்தில், கணவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்துவதாக கூறி இளம்பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கருப்பூர் அருகே மூங்கில்பாடி பகுதியைச் சேர்ந்த சொர்ணா என்பவருக்கு பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில், இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சொர்ணா, அதிமுக பிரமுகரான மாமனார் கோவிந்தசாமி, மாமியார் உள்ளிட்டோர் சூடு வைத்து சித்ரவதை செய்வதாகவும், கணவருடன் சேர்ந்து வாழ விடாமல் தடுப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கணவர் வீட்டின் முன்பு சொர்ணா, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், சொர்ணாவுக்கு நியாயம் கேட்டு, அவரது உறவினர்கள் கருப்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதை தொடர்ந்து, உரிய ஆவணங்களுடன் புகார் அளித்தால், கணவர் குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tvk Vijay || தலைமை செயலகத்தில் விஜய் பரபரப்பு புகார்.. ஸ்டன்னான அரசியல் களம்

TVK Vijay Complaint | ``விறுவிறுவென தலைமை செயலகத்துக்கே செல்லும் விஜய்’’

IJK | Paarivendhar | IJK தலைவர் பாரிவேந்தர் மகள் காரில் இருந்த பணம்.. பறிமுதல் செய்த பறக்கும் படை

Congress || DMK || காங்கிரஸ் உடன் திமுக பேச்சுவார்த்தை.. அடுத்து வரப்போகும் முக்கிய அப்டேட்

CM Stalin | DMK | திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்?