தமிழ்நாடு

"இளம் வழக்கறிஞர்கள் ஆங்கில புலமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்" - உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் அறிவுறுத்தல்

இளம் வழக்கறிஞர்கள் ஆங்கில புலமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

தந்தி டிவி

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்ட பட்டதாரிகள் 409 பேர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களாக பதிவு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன், வழக்கறிஞர் தொழிலுக்கு ஆங்கிலம் முக்கியம் என்றும், தாய் மொழி நேசிப்பு என்பது, பிறமொழி புறக்கணிப்பு அல்ல என்றும் குறிப்பிட்டார்.

போலி வழக்கறிஞர்களால், வழக்குகள், காவல் நிலைய கட்டப்பஞ்சாயத்தில் முடிவதாக உயர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் கூறினார். வழக்கறிஞர்கள் சமூகத்தின் பொறியாளர் மற்றும் தணிக்கையாளர் என நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தெரிவித்தார். புதிதாக பதிவு செய்துள்ள வழக்கறிஞர்கள் காவல் நிலையங்களுக்கு செல்லக் கூடாது என நீதிபதி கிருபாகரன் கேட்டுக்கொண்டார். பார்கவுன்சில் தலைவர் உள்ளிட்ட ஏராளமானோர் இளம் வழக்கறிஞர்களை பாராட்டினர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்