தமிழ்நாடு

கண்ட பேருண்டாசனம் யோகாவில் உலக சாதனை : 45 நிமிடங்கள் செய்து அசத்திய 8 ஆம் வகுப்பு சிறுவன்

நாகை மாவட்டம், மயிலாடுதுறையைச் சேர்ந்த 8 வகுப்பு படிக்கும் மாணவர் யோகாசனத்தில் உலக சாதனை படைத்துள்ளார்.

தந்தி டிவி
நாகை மாவட்டம், மயிலாடுதுறையைச் சேர்ந்த 8 வகுப்பு படிக்கும் மாணவர் யோகாசனத்தில் உலக சாதனை படைத்துள்ளார். இங்குள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர் மிஷாம், கண்ட பேருண்டாசனம் என்கிற யோகாவை 45 நிமிடங்கள் செய்து அசத்தினார். இந்த சாதனைக்கான சான்றிதழை நோபல் வேர்ல்டு ரெக்கார்டு நிர்வாகிகள் வழங்கியுள்ளனர். இதற்கு முன்னர் இந்த ஆசனத்தை 15 நிமிடங்கள் நிகழ்த்தியதே உலக சாதனையாக இருந்தது. சாதனை படைத்த மாணவன் மிஷாமை, தருமபுரம் ஆதீனம் இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக சுவாமிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ