தமிழ்நாடு

கொரோனா நோயாளிகளை பரிசோதிப்பதற்காக நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

கொரோனா பரிசோதனை செய்வதற்காக 5 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

தந்தி டிவி

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.5 கோடியே 48 லட்சம் மதிப்பில் மொத்தமாக 14 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள் வடிவைக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் முதற்கட்டமாக 5 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்களை முதல்வர் பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

5 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள் சென்னைக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 9 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள் பிற மாவட்டங்களுக்கு வழங்கப்படவுள்ளன. இந்த நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம் கொரோனா பாதித்தவர்களுக்கு சளியின் அளவை கண்டறிய முடியும். அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கும் பரிசோதனை செய்யலாம் என கூறப்படுகிறது. 2 நிமிடங்களில் பரிசோதனை முடிவுகளை தெரிந்து கொள்ளும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை