காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் வலது முழங்கையை இழந்த தினேஷ் என்ற இளைஞருக்கு 34 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்குப் பின் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில், இழப்பீட்டுத் தொகைக்குப் பதிலாக, எம்.பி.ஏ. வரை படித்துள்ள தனக்கு அரசு ஏதாவது வேலை தர வேண்டும் என்று தினேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.