தமிழ்நாடு

குடிநீர் இன்றி தவித்து வரும் வெள்ளப்பட்டி கிராம மக்கள்...

தூத்துக்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டி கிராம மக்கள் சாலை மற்றும் குடிநீர் வசதி இன்றி பெரும் அவதியடைந்து வருவதாக வேதனை.

தந்தி டிவி

தூத்துக்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டி கிராம மக்கள், சாலை மற்றும் குடிநீர் வசதி இன்றி பெரும் அவதியடைந்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, மோசமாக இருந்த சாலையை செப்பனிட ஜல்லி கற்கள் கொட்டப்பட்டன. அவை தற்போது கிடப்பில் உள்ளதால், கற்கள் பரப்பிய சாலையில் பயணிக்க முடியாமல் பெரும் அவதியடைந்துள்ளனர். பேருந்து மற்றும் வாகனங்களிலும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீரும், சாலையும் இன்றி அவதிப்படும் தங்கள் கோரிக்கைகளை விரைந்து தீர்க்க வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்