தமிழ்நாடு

ராஜேந்திர சோழன் கட்டிய கோயிலில் தமிழில் வழிபாடு

அரியலூர் அருகே ராஜேந்தி சோழன் கட்டிய ரணசிங்க ஈஸ்வரம் கோயிலில் தேவார, திருவாசகப் பாடல்களுடன் குடமுழுக்கு விழா களைகட்டியது.

தந்தி டிவி
அரியலூர் அருகே ராஜேந்தி சோழன் கட்டிய ரணசிங்க ஈஸ்வரம் கோயிலில், தேவார, திருவாசகப் பாடல்களுடன் குடமுழுக்கு விழா களைகட்டியது. இரணசூரன் என்ற மன்னனை வென்றதன் நினைவாக, சோழ மாமன்னன் ராஜேந்திர சோழனால் இந்த இரணசிங்க ஈஸ்வரம் என்ற சிவன் கோவிலை, கட்டப்பட்டது. இந்தக் கோயிலில் குடமுழுக்கு நடந்த முடிவு செய்த கிராம மக்கள், கோயிலை சீர்படுத்தி, இன்று குடமுழுக்கு செய்தனர். பல்வேறு கால பூஜைகள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்முறைப்படி பாராயணம் பாடிய சிவாச்சாரியார்கள், கோயில் கோபுரத்தில் புனித நீரை ஊற்றினர். தேவாரம், திருவாசகப் பாடல்களை பாடி தமிழ்முறைப்படி நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்