தமிழ்நாடு

"தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை" - ஸ்டாலின்

வரும் 8 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ள தொழிலாளர் போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அவற்றை பறிப்பதிலேயே மத்திய பா.ஜ.க. அரசு தீவிரம் காட்டி வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் தொழிலாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பா.ஜ.க. அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகள் உழைக்கும் வர்க்கத்தினர் மீது தொடுக்கப்பட்ட போராகவே உள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார். ஆண்டொன்றுக்கு 5 கோடி பேருக்கு வேலை தருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் பா.ஜ.க.வினர் என்றும், தற்போது ஆண்டுக்கு 2 கோடி பேர் வேலையிழந்து வரும் சூழலை உருவாக்கி உள்ளதாகவும் ஸ்டாலின் சாடியுள்ளார். தொழிலாளர் விரோத பா.ஜ.க. அரசின் நடவடிக்கையால், கோடிக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளதாகவும் பிரிட்டிஷ் அரசின் பிரித்தாளும் சூழ்ச்சியை மத்திய பா.ஜ.க. அரசு கடைப்பிடிப்பது கவலையளிப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி சுமூகத் தீர்வு காண, மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவாருக்கு பிரதமர் அறிவுறுத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்