தமிழ்நாடு

கடையில் இருந்தவர்களை கட்டி போட்டு லட்சக்கணக்கில் திருடிய கும்பல் - கோவையில் துணிகரம்!

தந்தி டிவி

கோவையில், பழைய இரும்பு குடோன் உரிமையாளரின் சகோதரர் உட்பட இருவரை கட்டிப்போட்டு 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடிச்சென்ற இந்துமக்கள் கட்சி நிர்வாகி உட்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் முருகன் என்பவர் அவரது சகோதரர் முத்தையாவுடன் இணைந்து பழைய இரும்பு குடோன் ஒன்றை நடத்தி வருகிறார். குடோன் அமைக்க நில உரிமையாளருக்கு 50 லட்சம் ரூபாய் முருகன் வழங்கியதாகவும், ஆனால் அவரின் பெயரில் பதிவு செய்யாததால் குடோன் மூடப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று நள்ளிரவு, குடோனில் முத்தையா மற்றும் பேச்சிமுத்து ஆகியோர் உறங்கியபோது, அவர்களை கயிற்றால் கட்டிப்போட்ட மர்மநபர்கள், 6 டன் காப்பர் கம்பிகள் உள்ளிட்ட 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல பொருட்களை எடுத்துச்சென்றனர். புகாரின்பேரில் இந்துமக்கள் கட்சி நிர்வாகி காலணி பிரபு உட்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் குடோனை வேறொருவருக்கு வழங்க வேண்டி பணம் பெற்று கட்டப்பஞ்சாயத்து செய்ததும், தொடர்ந்து திருட்டு நடைபெற்றதும் தெரியவந்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்