தமிழ்நாடு

Chennai | சென்னையில் மூச்சு முட்டி பலியான தொழிலாளர் - உதவி பொறியாளருக்கு வலைவீச்சு

சென்னையில் மூச்சு முட்டி பலியான தொழிலாளர் - உதவி பொறியாளருக்கு வலைவீச்சு

thanthitv

சென்னையில் மூச்சு முட்டி பலியான தொழிலாளர் - உதவி பொறியாளருக்கு வலைவீச்சு சென்னை திருவொற்றியூரில் பாதாள கழிவுநீர் கால்வாய் பணியின்போது மண் சரிந்ததில் தொழிலாளர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவான உதவி பொறியாளரை போலீசார் தேடி வருகின்றனர். பாதாள கழிவுநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மண் சரிந்து திருவண்ணாமலையைச் சேர்ந்த பூமிநாதன் என்பவர் உயிரிழந்தார். மீட்பு உபகரணங்கள் எதுவுமில்லாததால் அவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஒப்பந்ததாரர் ராஜசேகர் மற்றும் மேஸ்திரி செல்வம் ஆகிய இருவரை போலீசார் கைது செய்த நிலையில், நேரில் வந்து ஆய்வு செய்யாமல் அலுவலகத்தில் இருந்தபடியே பணியைத் தொடர உத்தரவிட்ட மாநகராட்சி உதவி பொறியாளர் அரவிந்த் ராஜா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள உதவி பொறியாளரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Gas Booking | மக்களே உடனே பண்ணுங்க.. இதை செய்யலனா கேஸ் புக் செய்ய முடியாது

Toxic |பட விழாவில் கடும் கூட்ட நெரிசல் - பேசி கொண்டிருக்கும்போதே சரிந்து விழுந்த ரசிகர்கள்

Students Protest ``கல்லூரி மாணவர்கள் போராட தடை?’’ - விளக்கம் கேட்டு பறந்த உத்தரவு

CPM ``உங்களுக்கு கம்யூ., கட்சி வேணுமா.. இல்ல அதிகாரிகள் வேணுமா’’ - கடும் எதிர்ப்பால் அரசு அதிரடி

New Tamil Movie Release | தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் நிறுத்தம்