பெண்களின் கையில் இருந்து சாதுவாக விடுபடும் காளைகள், மண்ணை கீறி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தின. முதியவரின் தளர்ந்த பிடியில் வரும் காளையும் பார்வையிலேயே அச்சுறுத்துகிறது. மயில காளை, மச்சக் காளை, செவலை காளை, கருங்காலி என தங்களின் முரட்டு காளைகளை குழந்தைகளை போல் பயிற்சிக்கு கூட்டி வருகின்றனர். கூடவே குழந்தைகளும் தான்.
முரட்டு திமிலோடு, பார்வையில் பயமுறுத்தி, சீற்றத்தால் சிதறடிக்கும் காளைகளை மடக்க, காளையர்களும் தயாராகி வருவது, பார்வையாளர்களை உற்சாகப்படுத்தி உள்ளது