தமிழ்நாடு

நாளமில்லா சுரப்பி தொடர்பான நோயால் அவதிப்படும் இளம்பெண் : நடனத்திறமையால் பல்வேறு விருதுகள் குவிப்பு

கடலூரில், நாளமில்லா சுரப்பி தொடர்பான நோய் கொண்ட பெண் ஒருவர், தமது நடனத் திறமையால், நூற்றுக்கணக்கான விருதுகளையும், உலக சாதனைகளையும் படைத்துள்ளார்.

தந்தி டிவி

கடலூரைச் சேர்ந்த அமிர்தராஜ் - ஜீவா தம்பதியினரின் ஒரே மகளான ஏஞ்சலின் செரில், கான்ஜெனிடல் அட்ரினல் ஹைபர்ப்ளாசியா (Congenital adrenal hyperplasia ) எனும் நோயால் அவதிப்பட்டு வருகிறார்.

இந்நோயை குணப்படுத்த முடியாது. அதே சமயம், மரணத்தை கொஞ்சம் கொஞ்சமாக தள்ளிப் போட முடியும் என மருத்தவர்கள் கூறுகின்றனர். ஆனாலும் தமது நடனத்திறமையால், ஏஞ்சலின் செரில், கடலூர் சிறகுகள் என்ற அமைப்பின் மூலம் 800 க்கும் மேற்பட்ட மேடைகளில் ஆடி அசத்தி வருகிறார். குறிப்பாக, பரதநாட்டியம், கிராமிய நடனம், மேற்கத்திய நடனம், பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம், குச்சிப்புடி நடனங்களை ஆடுவதில் வல்லவராக திகழும், ஏஞ்சலின், திருநங்கைகளுக்கு இலவசமாக நடனம் கற்றுத்தர வேண்டும் என்பதே தமது விருப்பம் என கூறுகிறார்.

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு