தமிழ்நாடு

சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி

குடும்ப பிரச்சினை காரணமாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
குடும்ப பிரச்சினை காரணமாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மெய்யனூர் பகுதியை சேர்ந்த கவிதா என்பவர், தனது கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, தம்மையும், மகளையும் புறக்கணிப்பதாக புகார் அளித்துள்ளார். ஆனால் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், ​மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவிதா தீக்குளிக்க முயன்றார். அப்போது பணியில் இருந்த போலீசார், தண்ணீரை ஊற்றி அவரை தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக கவிதாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்