தமிழ்நாடு

நண்பருடன் பிறந்த நாள் கொண்டாட பெண் சொன்ன பொய் - இப்படியும் கூட பொய் சொல்வார்களா என பயணிகள் வேதனை

கொரோனா உள்ளதாக கூறி பேருந்தை விட்டு கீழே இறங்கி சென்ற பெண்ணால் பரபரப்பு உருவானது.

தந்தி டிவி
சென்னையில் இருந்து கோவை சென்ற சொகுசு பேருந்தில் சுஜிதா என்ற பெண் பயணித்துள்ளார். மேல்மருவத்தூர் வரும் பொழுது தமக்கு கொரோனா உள்ளதாக கூறி, பேருந்தில் இருந்து இறங்கியவர், பின்னால் வந்த காரில் ஏறி சென்றுள்ளார். இந்நிலையில் பேருந்தில் வந்தவர்கள் தங்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும்படி கூறி நடத்துநரிடம் தகராறு செய்துள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், நண்பர்கள் உடன் பிறந்த நாள் விழா கொண்டாட பொய் சொல்லி பேருந்தை நிறுத்தி இறங்கி சென்றது தெரிய வந்துள்ளது. போலீசாரின் சமரசத்தை தொடர்ந்து, கோவை நோக்கி பேருந்து புறப்பட்டது.

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..