தமிழ்நாடு

கிணற்றில் தவறி விழுந்த இளம் பெண் : பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்

தண்ணீர் கிணற்றில் விழுந்த இளம் பெண் லேசான காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டார்.

தந்தி டிவி

சென்னை அருகே வளசரவாக்கத்தில் தண்ணீர் கிணற்றில் விழுந்த இளம் பெண் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டார். வளசரவாக்கம், சவுத்ரி நகர், 16 வது தெருவை சேர்ந்த கஸ்தூரி என்ற இளம்பெண் கிணற்றை சுற்றி கொசு மருந்தை தெளிக்கும் போது எதிர்பாராத விதமாக கிணற்றிற்குள் விழுந்தார். கஸ்தூரியின் சத்தம் கேட்டு வந்து பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தியணைப்பு வீரர்கள் கயிறு மற்றும் இரும்பு ஏணியை கிணற்றுக்குள் இறக்கி கஸ்தூரியை மீட்டனர். கிணற்றில் தண்ணீர் இருந்ததால் கஸ்தூரி லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை