தமிழ்நாடு

கிணற்றில் தவறி விழுந்த இளம் பெண் : பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்

தண்ணீர் கிணற்றில் விழுந்த இளம் பெண் லேசான காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டார்.

தந்தி டிவி

சென்னை அருகே வளசரவாக்கத்தில் தண்ணீர் கிணற்றில் விழுந்த இளம் பெண் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டார். வளசரவாக்கம், சவுத்ரி நகர், 16 வது தெருவை சேர்ந்த கஸ்தூரி என்ற இளம்பெண் கிணற்றை சுற்றி கொசு மருந்தை தெளிக்கும் போது எதிர்பாராத விதமாக கிணற்றிற்குள் விழுந்தார். கஸ்தூரியின் சத்தம் கேட்டு வந்து பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தியணைப்பு வீரர்கள் கயிறு மற்றும் இரும்பு ஏணியை கிணற்றுக்குள் இறக்கி கஸ்தூரியை மீட்டனர். கிணற்றில் தண்ணீர் இருந்ததால் கஸ்தூரி லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு