தமிழ்நாடு

கிணற்றில் தவறி விழுந்த இளம் பெண் : பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்

தண்ணீர் கிணற்றில் விழுந்த இளம் பெண் லேசான காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டார்.

தந்தி டிவி

சென்னை அருகே வளசரவாக்கத்தில் தண்ணீர் கிணற்றில் விழுந்த இளம் பெண் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டார். வளசரவாக்கம், சவுத்ரி நகர், 16 வது தெருவை சேர்ந்த கஸ்தூரி என்ற இளம்பெண் கிணற்றை சுற்றி கொசு மருந்தை தெளிக்கும் போது எதிர்பாராத விதமாக கிணற்றிற்குள் விழுந்தார். கஸ்தூரியின் சத்தம் கேட்டு வந்து பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தியணைப்பு வீரர்கள் கயிறு மற்றும் இரும்பு ஏணியை கிணற்றுக்குள் இறக்கி கஸ்தூரியை மீட்டனர். கிணற்றில் தண்ணீர் இருந்ததால் கஸ்தூரி லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்