தமிழ்நாடு

போலி மருத்துவர் மூலம் கருக்கலைப்பு செய்த பெண் பலி

ஆயுர்வேத மருத்துவரிடம் கருக்கலைப்பு செய்த பெண் பலியான சம்பவம் பொள்ளாச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள மெட்டுவாவி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி செல்வராஜ். இவரது மனைவி வனிதாமணி. அவர்களுக்கு ஏற்கெனவே 5 குழந்தைகள் உள்ள நிலையில், வனிதாமணி மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். அதனால் கருவை கலைப்பதற்காக ஆயுர்வேத மருத்துவரான முத்துலட்சுமி என்பவரை நாடியுள்ளார். அதை தொடர்ந்து வனிதாமணிக்கு கருக்கலைப்பு ஊசியை முத்துலட்சுமி போட்டுள்ளனர். அதில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே வனிதாமணி உயிரிழந்தார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தலைமறைவான முத்துலட்சுமியை போலீசார் தேடி வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி