தமிழ்நாடு

போலி மருத்துவர் மூலம் கருக்கலைப்பு செய்த பெண் பலி

ஆயுர்வேத மருத்துவரிடம் கருக்கலைப்பு செய்த பெண் பலியான சம்பவம் பொள்ளாச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள மெட்டுவாவி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி செல்வராஜ். இவரது மனைவி வனிதாமணி. அவர்களுக்கு ஏற்கெனவே 5 குழந்தைகள் உள்ள நிலையில், வனிதாமணி மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். அதனால் கருவை கலைப்பதற்காக ஆயுர்வேத மருத்துவரான முத்துலட்சுமி என்பவரை நாடியுள்ளார். அதை தொடர்ந்து வனிதாமணிக்கு கருக்கலைப்பு ஊசியை முத்துலட்சுமி போட்டுள்ளனர். அதில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே வனிதாமணி உயிரிழந்தார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தலைமறைவான முத்துலட்சுமியை போலீசார் தேடி வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"