தமிழ்நாடு

போடப்பட்ட ஊசி - கர்ப்பிணி பரிதாபமாக பலி

தந்தி டிவி

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்,ஆன்டிபயாடிக் ஊசி செலுத்தப்பட்டதின் காரணமாக, உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன்.இவரது மனைவி மீனாட்சி, பிரசவத்திற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பெண் குழந்தை பிறந்தது. பின்னர், தையலிடப்பட்ட இடத்தில் கிருமி தொற்று இருப்பதாக கூறி தொடர்ச்சியாக ஆன்டிபயாடிக் ஊசி செலுத்தப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது குறித்து உரிய விளக்கம் அளிக்கப்படாததின் காரணமாக, மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி