தமிழ்நாடு

காவல்துறை விசாகா குழுவை மாற்றக் கோரிக்கை - பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி உயர்நீதிமன்றத்தில் மனு

காவல்துறையில் ஏற்படுத்தப்பட்ட விசாகா குழுவை மாற்றி அமைக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி. சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தந்தி டிவி

* தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பெண் எஸ்.பி., தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஐஜி-க்கு எதிராக புகார் அளித்தார்.

* இதனை கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையிலான விசாகா குழு விசாரித்து வருகிறது.

* இந்நிலையில், இந்த குழுவை மாற்றியமைக்க கோரியும்,

* சம்பந்தப்பட்ட ஐஜியை பணி மாற்றம் செய்து, குற்ற நடவடிக்கை எடுக்க கோரியும், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

* இந்த மனு நீதிபதி சத்ருகனா புஜாரி முன் விசாரணைக்கு வந்தது.

* அப்போது, ஐஜி தொடர்ந்து அந்த பதவியில் நீடித்தால் சாட்சிகளை கலைக்க கூடும் எனவும்

* இந்த வழக்கில் விசாகா குழுவை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட வேண்டும் எனவும் பெண் அதிகாரி தரப்பில் வாதிடப்பட்டது.

* இதை ஏற்ற நீதிபதி, விசாகா குழுவை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு, விசாரணையை 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ