தமிழ்நாடு

காவல்துறை விசாகா குழுவை மாற்றக் கோரிக்கை - பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி உயர்நீதிமன்றத்தில் மனு

காவல்துறையில் ஏற்படுத்தப்பட்ட விசாகா குழுவை மாற்றி அமைக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி. சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தந்தி டிவி

* தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பெண் எஸ்.பி., தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஐஜி-க்கு எதிராக புகார் அளித்தார்.

* இதனை கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையிலான விசாகா குழு விசாரித்து வருகிறது.

* இந்நிலையில், இந்த குழுவை மாற்றியமைக்க கோரியும்,

* சம்பந்தப்பட்ட ஐஜியை பணி மாற்றம் செய்து, குற்ற நடவடிக்கை எடுக்க கோரியும், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

* இந்த மனு நீதிபதி சத்ருகனா புஜாரி முன் விசாரணைக்கு வந்தது.

* அப்போது, ஐஜி தொடர்ந்து அந்த பதவியில் நீடித்தால் சாட்சிகளை கலைக்க கூடும் எனவும்

* இந்த வழக்கில் விசாகா குழுவை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட வேண்டும் எனவும் பெண் அதிகாரி தரப்பில் வாதிடப்பட்டது.

* இதை ஏற்ற நீதிபதி, விசாகா குழுவை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு, விசாரணையை 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி