தமிழ்நாடு

திருமணமான 20 நாட்களில் பெண் தற்கொலை

திருப்பூர் அருகே திருமணமான 20 நாட்களில் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

தந்தி டிவி

திருப்பூர் அருகே திருமணமான 20 நாட்களில் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். முத்தூரைச் சேர்ந்த குமார் என்பவருக்கும் விருதுநகரைச் சேர்ந்த 19 வயது பெண் சரோஜா தேவிக்கும் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி அன்று திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தநிலையில், இன்று காலை குமார் வெளியில் சென்றிருந்த நிலையில், வீட்டில் இருந்த சரோஜா தேவி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து வந்த போலிசார், சரோஜாதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்